தெலங்கானாவில் பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தால் வன்முறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலம் ஆசிபாபாத்தில் பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தால் வன்முறை வெடித்துள்ளது. 

தெலங்கானா மாநிலம், ஜைனுர் கிராமத்தில் பழங்குடியின பெண்ணுக்கு, ஆட்டோ ஓட்டுநர் ஷேக் மக்தூம் என்பவர், பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதே பகுதியில் உள்ள மசூதியை அடித்து நொறுக்கினர். மேலும், அங்கிருந்த கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷேக் மக்தூம்மை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day