தெலங்கானா: கேஸ் கட்டரை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி ரூ.25 லட்சம் கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் அருகே கேஸ் கட்டரை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி 25 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மகபூபாபாத் அருகே உள்ள பையாரம் நகரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம்மிற்கு இரவு நேரத்தில் காரில் வந்த கொள்ளையர்கள்  ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் வெட்டி அதில் வைக்கப்பட்டிருந்த 25 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து தப்பி சென்று விட்டனர். காலையில் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் அளித்து  அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Night
Day