தேசிய நெடுஞ்சாலையை கடந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில், தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள பைடி பீமவரம் அருகே இளைஞர்கள் சிலர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று இளைஞர் மீது மோதியது. இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உயிரிழந்த இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். தற்போது, விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Night
Day