தேனி: குடும்ப பிரச்னை காரணமாக தாயும், மகனும் விஷமருந்தி தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் ஆனைமலையன்பட்டி கிராமத்தில் தாயும், மகனும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனைமலையன்பட்டி பாலோடை பகுதியை சேர்ந்த விவசாயி குமரேசன் - மாரீஸ்வரி தம்பதிக்கு கிஷோர் குமார் என்ற மகன் உள்ளார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேவிக்கும் திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரியுள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், தேவியின் உறவினர்கள் குமரேசன் குடும்பத்தாரிடம் தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் மாரீஸ்வரியும், கிஷோர் குமாரும் அரளி விதையை தின்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day