நாகர்கோவில்: தேநீர் கடையில் கல்லாவிலிருந்து பணத்தை திருடிய முதியவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் எதிரே தேநீர் கடை ஒன்றில் டீ குடிக்க வந்தவர் கடையில் பணத்தை திருடி அடி வாங்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தேநீர் கடை ஒன்றில் அதிகாலை 4 மணி அளவில் சுமார் 55 வயது மதிக்கதக்க ஒருவர் டீ குடிக்க வந்தார். அப்போது கடையில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு செல்ல முயன்றபோது ஊழியர்கள் அவரை பிடித்து தாக்கினர். ஆனால் அந்த முதியவர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். இது குறித்த கண்காணிப்பு கேமரா காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day