நாகை: இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ராணுவ வீரர் வெட்டிக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ராணுவ வீரரை அரிவாளால் வெட்டி கொன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சிவராஜ், கடந்த 2021ம் ஆண்டில் முன்விரோதம் காரணமாக ரவி என்பவரை வெட்டிக் கொலை செய்தார். ஜாமினில் வெளிவந்த இவர், தனது இருசக்கர வாகனத்தில் நாகை நோக்கி சென்று கொண்டிருந்தார். தேத்தாக்குடி வடக்கு மெயின்ரோட்டில் சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல், சிவராஜை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு காரில் தப்பி சென்றது. சம்பவ இடத்தில் ஆய்வு செய்த எஸ்.பி. ஹர்ஷ்சிங், கொலை தொடர்பாக 6 பேர் மீது சந்தேகம் உள்ளதாகவும், முருகானந்தம் என்பவர் திருவாரூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

Night
Day