நாகை: காரின் முகப்பு விளக்கை குறைக்கவில்லை எனக்கூறி இளைஞர்கள் தகராறு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை அருகே காரின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தை குறைக்கவில்லை எனக்கூறி கார் கண்ணாடியை உடைத்து ஓட்டுனரை தாக்கிய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. வெளிப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம், தனது காரில் ஓட்டுநர் கதிரவனுடன் இரவு பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் சாலை அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், காரின் முகப்பு விளக்கை டிம் செய்யவில்லை எனக்கூறி தகராறில் ஈடுபட்டனர். மேலும் காரின் கண்ணாடியை உடைத்து, ஆறுமுகம் மற்றும் ஓட்டுநர் கதிரவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி மேற்கொண்டுள்ளனர். 

Night
Day