நாமக்கல்: இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற  இளம்பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களின் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர், வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் பிரியதர்ஷினி அணிந்திருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து, பிரியதர்ஷினி அளித்த புகாரின்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர். 

Night
Day