நீலகிரி: மது அருந்திவிட்டு போதை காளான் சாப்பிட்ட இளம்பெண் பலி - காதலன் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகையில் மது அருந்திவிட்டு போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். கோவையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்த ரிதி ஏஞ்சல் என்ற பெண், காதலன் ஆகாஷுடன் உதகை சென்றுள்ளார். இருவரும் மது அருந்திவிட்டு பைன் ஃபாரஸ்ட் பகுதிக்கு சென்று போதை காளான் சாப்பிட்ட நிலையில், மறுநாள் காலை ரிதி ஏஞ்சல் உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து கொலை குற்றம் ஆகாத மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆகாஷை கைது செய்தனர். 

Night
Day