நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் சிபிஐ சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா நகரில், காவல் ஆய்வாளர்  வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளராக ஆனந்த்பாபு பணியாற்றியபோது நில அபகரிப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அண்ணா நகரில் உள்ள ஆய்வாளர் ஆனந்த்பாபு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெசன்ட் நகரைச் சேர்ந்த ஸ்டேட் வங்கி பெண் அதிகாரி ஹரினி என்பவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day