நெல்லையை அதிர வைத்த படுகொலை- 5 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் பிரபல ரவுடி தீபக் ராஜா கொலை வழக்கில் 5 பேரை கைதுசெய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் தீபக் ராஜா என்ற ரவுடி, கடந்த 20ம் தேதி பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தீபக் ராஜா கொலை வழக்கில், முக்கிய குற்றவாளிகள் ஐந்து பேரை கைது செய்துள்ள தனிப்படை போலீசார், அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day