நெல்லை : கட்டிட தொழிலாளி சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே இளைஞரை சரமாரியாக வெட்டிக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். வல்லவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரஞ்சித் நேற்றிரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து மாதவகுறிச்சி காட்டுப்பகுதியில் மது அருந்தியுள்ளார்.  அப்போது அங்கு சென்ற அருண்குமார் என்ற இளைஞர் ரஞ்சித்தை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளார். தகவல் அறிந்து சென்ற சீதபற்பநல்லூர் போலீசார் ரஞ்சித்தின் உடலை மீட்டு, வழக்குப்பதிந்து தப்பியோடிய அருண்குமாரை கைது செய்தனர். விசாரணையில் அருண்குமாரின் மனைவி குறித்து ரஞ்சித்தின் சகோதாரர் தவறாக பேசியதால் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

Night
Day