நெல்லை : திமுக பிரமுகர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் திமுக பிரமுகர் வீட்டில் இருந்து 17 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், நெல்லையில் உள்ள திமுக பிரமுகர்கள் மற்றும் அரசு  ஒப்பந்ததாரர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 கிலோ தங்க நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை, தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

varient
Night
Day