நெல்லை : பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் - சக கைதி படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கைதி படுகாயமடைந்தார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரைச் சேர்ந்த மருதவேலுவுக்கும், சக கைதிகளான பாலசுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி ஆகியோருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியமும், சுந்தரமூர்த்தியும் அங்கிருந்த கம்பியை எடுத்து மருதவேலை கடுமையாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் மருதவேலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பெருமாள்புரம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day