நெல்லை: பேருந்துக்குள் புகுந்து ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய நபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தனியார் பேருந்துக்குள் புகுந்து ஓட்டுநரை வெட்டிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசுக்கிடைவிளை பகுதியை சேர்ந்த மகேஷ், தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 4ம் தேதி காரையாரில் இருந்து அம்பாசமுத்திரத்திற்கு பேருந்தை ஓட்டி வந்தார். அப்போது, பேருந்தில் இருந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மகேஷை வெட்டினார். இதனையடுத்து சுதாரித்து கொண்ட ஓட்டுநர் அரிவாளால் தாக்கியவரை மடக்கி பிடித்தார். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day