க்ரைம்
பாலியல் புகார் அளித்த பெண் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக குற்றச்சாட்டு..!...
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்த பெண் மீது போலீச...
போலீசாரால் சுடப்பட்ட கைதி நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் குறிப்பிட்ட சமுதாய மக்களை குறிவைத்து போலீசார் தாக்குதல் நடத்துவதாக வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். அம்பாசமுத்திரம் அருகே கருப்பசாமி என்பவரை கொலை செய்தது தொடர்பாக பேச்சுத்துரை, சந்துரு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் பேச்சிதுரையை காலில் சுட்டு பிடித்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேச்சிதுரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் மீது காவல்துறையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பேச்சிமுத்து என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்த பெண் மீது போலீச...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...