படுகொலை செய்யப்பட்ட ராமகிருஷ்ணன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூரில் படுகொலை செய்யப்பட்ட ராமிகிருஷ்ணனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த ராம கிருஷ்ணன் என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் ஆஜராக கருர் நீதிமன்றத்துக்கு கடந்த 19ம் தேதி பைக்கில் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அரவக்குறிச்சி அருகே வந்த நபர்கள் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இதனை அறிந்த ராமகிருஷ்ணன் உறவினர்கள், உண்மை குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் போராட்டம் நடத்தினர். குற்றவாளிகள் 6 பேர் சரணமடைந்த நிலையில், கடந்த 7 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உறவினர்கள் இன்று அவரது உடலை பெற்றுக்கொண்டனர்.

Night
Day