பர்கர்கிங் உணவகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 டெல்லியில் உள்ள பர்கர் கிங் உணவகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மேற்கு டெல்லியின் ரஜோரி கார்டனில் உள்ள பர்கர் கிங் உணவகத்திற்குள் அடையாளம் தெரியாத 3 மர்மநபர்கள் நுழைந்துள்ளனர். அவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, கடையின் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day