பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரியை தாக்கிய பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார். சென்னை வளசரவாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மெட்ரோ ரயில் நிறுவன  உதவி மேலாளர் வடிவேலு தலைமையில் ஊழியர்கள், மெட்ரோ பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுபோதையில் அங்கு வந்த திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன், முன்னறிவிப்பு இன்றி சாலையில் பள்ளம் தோண்டி இருப்பதாகக்கூறி  ஊழியர்களை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்.  இதனால்  ஏற்பட்ட வாக்குவாதத்தில் மெட்ரோ நிறுவன  தவி மேலாளரை, வேல்முருகன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரையடுத்து வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கடும் எச்சரிக்கைக்கு பின்னர் காவல் நிலைய ஜாமினில் வேல்முருகனை போலீசார் விடுவித்தனர்.

Night
Day