புதுக்கோட்டை: குடும்பத்துடன் திட்டம் தீட்டி ரூ.85 லட்சம் கொள்ளை - 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டையில் குடும்பத்துடன் திட்டம் தீட்டி தனியார் நிறுவன மேற்பார்வையாளரிடம் 82 லட்சம் ரூபாய் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றும் சதீஷ், கடந்த சில தினங்களுக்கு முன் காரில் ஓட்டுநர் ராமனுடன் திருவண்ணாமலையில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க புறப்பட்டுள்ளார். அவர்களது கார், கட்டியாவயல் அருகே சென்றபோது 82 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் திருடுபோனதோடு, ஓட்டுநர் ராமனும் மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரின் விசாரணை நடத்திய போலீசார், 48 மணிநேரத்தில் கொள்ளையில் ஈடுபட்ட ராமனின் உறவினர்கள் செல்வமணி, சண்முகம் ஆகியோரை கைது செய்தனர். அத்துடன், புத்தாம்பூர் பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட 75 லட்சத்து 66 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான ராமனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Night
Day