புதுச்சேரியில் பல்பொருள் அங்காடியில் பொருட்களை திருடி செல்லும் டிப்-டாப் ஆசாமி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் உள்ள பல்பொருள் அங்காடியில் மர்ம நபர் ஒருவர் பொருட்களை திருடி தனது கைப்பையில் போட்டு சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. அரவிந்தர் வீதியில் ரவுல் என்பவரின் பல்பொருள் அங்காடி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு, டிப்-டாப்பாக வந்த மர்ம நபர் ஒருவர் பொருட்களை வாங்குவது போல் கூடையில் போட்டுக் கொண்டார். பின்னர், யாரும் இல்லாத மறைவான இடத்திற்கு சென்று தான் வைத்திருந்த கைப்பையில் பொருட்களை போட்டு சென்றார். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதனையடுத்து, கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Night
Day