புதுச்சேரி கடற்கரையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 24 மணி நேரத்திற்குள் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி கடற்கரையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 24 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்கப்பட்டது. லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி - விஜயலட்சுமி தம்பதி கடற்கரை சாலையில் பொம்மை விற்றுக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த சனல்யா என்ற மூன்றரை வயது குழந்தை திடீரென மாயமானது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 இளைஞர்களுடன் குழந்தை சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரைக்காலில் குழந்தையை மீட்ட போலீசார், மூர்த்தி, ஆகாஷ் ஆகியோரை கைது செய்தனர். 

Night
Day