புதுச்சேரி: கடத்தப்பட்ட பலூன் வியாபாரியின் குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் கடத்தப்பட்ட 4 வயது குழந்தையை 24 மணிநேரத்தில்
பத்திரமாக மீட்ட காவல்துறையினர், கடத்தல்காரர்களை கைது செய்தனர். 
புதுச்சேரி கடற்கரையில் பலூன் விற்கும் தொழில் செய்து முத்துப்பாண்டி-விஜயலட்சுமி தம்பதியின் 4 வயது பெண் குழந்தை வியாழக்கிழமை திடீரென மாயமானது. இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, 2 இளைஞர்கள் குழந்தையை கடத்தி ஒரு பெண்ணிடம் கொடுத்து ஆட்டோவில் அனுப்பி வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார், குழந்தையை கடத்தியவர்கள் காரைக்காலில் இருப்பதை கண்டறிந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். கடத்தப்பட்ட குழந்தையை ஒன்றை லட்ச ரூபாய்க்கு விற்க முயற்சித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Night
Day