புதுச்சேரி: போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த 16 இளைஞர்கள் மீது வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்காலில் மஸ்தான் சாகிப் தர்காவின் சந்தனக்கூடு விழாவில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த 16 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மஸ்தான் சாகிப் தர்காவின் சந்தனக்கூடுவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.  இந்நிலையில் சந்தனக்கூடு ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு அலங்கார ஊர்திகள் முன்பாக இளைஞர்கள் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 16 இளைஞர்கள் மீது நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day