புனே கார் விபத்து : சிறுவனின் தந்தையை தொடர்ந்து தாத்தாவும் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். புனேவில் உள்ள கல்யாணிநகர் சந்திப்பில் கடந்த ஞாயிற்றுகிழமை மதுபோதையில் 17 வயது சிறுவன் போர்ஸ் சொகுசு காரை மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவனுக்கு ஜாமீன் வழங்கியது எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், ஜாமீன் ரத்து செய்யப்பட்டு ஜூன் 5ம் தேதி வரை சிறார் முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விபத்தை ஓட்டுநர் தான் ஏற்படுத்தியதாக ஒப்புக்கொள்ள வற்புறுத்தியதால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Night
Day