பெங்களூருவில் போக்குவரத்து காவலரின் கையை கடித்த வாகன ஓட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகாவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போக்குவரத்து காவலரின் கையை, வாகன ஓட்டி கடித்து வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது, அந்த வழியாக ஸ்கூட்டரில் தலைக்கவசம் அணியாமல் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். இதனைக் கண்ட போலீசார், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காவலரின் கையை பிடித்து கடித்துள்ளார். இதனையடுத்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Night
Day