பெசன்ட் நகர் விபத்து - ஆந்திர எம்.பி. மகள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெசன்ட் நகரில் கார் ஏறியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஆந்திர  மாநிலத்தை சேர்ந்த எம்.பி.யின் மகளை போலீசார் கைது செய்தனர்.

 ஓடக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான சூர்யா.  ஆட்டோ ஒட்டிக்கொண்டும், பெயிண்டராகவும் வேலை பார்த்து வந்த  இவர், 17ம் தேதி இரவு காலாக்ஷேத்ரா காலனி வரதராஜ் சாலை நடைபாதை அருகே மதுபோதையில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சூர்யாவின் மீது ஏறி இறங்கியதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய காரை சுற்றி வளைக்க முயன்றபோது, அதில் வந்த இரண்டு பெண்களும் காருடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதனிடையே காரில் வந்த பெண்களில் ஒருவர் ஆந்திர மாநிலத்தின்  ஒய.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா எம்பி பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதுரி என்பது தெரிய வந்துள்ளது. சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் பீடா மாதுரியை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day