பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்-திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புதுவண்ணாரப்பேட்டை இளைய தெருவில் உள்ள தனியார்  திருமண மண்டபத்தில்  திமுக பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.  அப்போது கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக திமுக 43வது வட்ட பிரதிநிதி முத்தமிழ் என்பவருக்கும் திமுக நிர்வாகிகளான ரமேஷ் மற்றும் அருண் ஆகியோருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள், முத்தமிழை தாக்கியுள்ளனர். அப்போது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மகேஷ்வரி தாக்குதலில் ஈடுபட்டவர்களை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள் காவல் உதவி ஆய்வாளரை மிரட்டியுள்ளனர். இதனால் போலீசார் இருவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

Night
Day