பெரம்பலூர் : சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய திமுகவினர்

எழுத்தின் அளவு: அ+ அ-

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில், சுங்க கட்டணம் கேட்ட ஊழியர்களை திமுகவினர் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு எற்பட்டது.

சென்னையில் இருந்து கார் மூலம் பெரம்பலூர் நோக்கி திமுக பிரமுகர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அவர்கள், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே வந்தபோது, அங்கிருந்த ஊழியர்கள் காரில் வந்த திமுகவினரிடம் சுங்க கட்டணம் கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் காரில் இருந்து இறங்கி சுங்கச்சாவடி ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், காயம் அடைந்த ஊழியர்கள் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Night
Day