பெரம்பலூர்: கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த நாட்டு வெடிகுண்டுகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெரம்பலூரில் நேற்று கேட்பாரற்று கிடந்த பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குண்டுகள், கையெறி வகை குண்டுகள் என்று நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். பெரம்பலூரில் நேற்று டாஸ்மாக் கடையின் பின்புறமுள்ள காலி திடலில் கிடந்த வெடிகுண்டுகளுடன் கூடிய பையை பெரம்பலுர் போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் பையில் இருந்த 16 குண்டுகளும் கையெறி வகையை சேர்ந்த நாட்டு வெடிகுண்டுகள் என்று நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் விஏஓ அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Night
Day