போதை ஊசி செலுத்தி கொண்ட 17 வயது சிறுவன் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பிராட்வே பகுதியில் போதை ஊசி செலுத்தி கொண்ட 17 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தான். புளியந்தோப்பை சேர்ந்த ஜாகீர் என்பவர், அதே பகுதியில் உள்ள எலக்ட்ரீஷியன் கடையில், கடந்த ஆறு மாதங்களாக ஹெல்பராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர், நேற்று மாலை பிராட்வே பகுதியில் சாலையோரம் வசிக்கும், தனது நண்பரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, போதைக்கு அடிமையான ஜாகீர் உட்பட 4 பேர் போதை ஊசி போட்டுக் கொண்டுள்ளனர். பின்னர், வீட்டை விட்டு வெளியே வந்த ஜாகீர், வாந்தியெடுத்து மயங்கி விழுந்துள்ளான். உடனே, நண்பர்கள் ஜாகீரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ந்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  துகுறித்து எக்ஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day