போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீதிமன்றத்தில் சரண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

அண்ணா நகர் மேற்கு பகுதி பாடிகுப்பம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. கடந்த மாதம் பாடி குப்பம் பகுதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த அவரை, இருசக்கர வாகனத்தில் வந்த 4 நபர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றது.  இதில் பலத்த காயமடைந்த வீரமணி கேஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போலீசார் முகேஷ், தீபக், அரவிந்த், காளி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக பிரபல ரவுடி கவி என்கிற கவியரசை போலீசார் தேடி வந்த நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Night
Day