மகாராஷ்டிரா: காலணிக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெளிநாட்டில் இருந்து மகாராஷ்டிரா வந்த பயணி தனது காலணிக்குள் மறைத்து கடத்தி வந்த தங்கத்தை, மும்பை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மும்பை விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான பயணியை பிடித்து சோதனை நடத்திய அதிகாரிகள், ஒரு கோடியே 76 லட்சம் மதிப்புள்ள சுமார் 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும், 4 ஐ-ஃபோன்கள், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 350 ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் 
ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து தங்கத்தை கடத்தி வந்த பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day