மகாராஷ்டிரா: தலைமறைவாக இருந்த இரட்டை கொலை வழக்கு குற்றவாளி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் பகுதியில் குட்டைக்குள் மறைந்திருந்த கொலை குற்றவாளி அதிரடியாக கைது செய்யப்பட்டார். மன நலம் பாதித்த கிஷோர் குமார் மண்டல், முதியோர் இருவரை கோடாரியால் தாக்கி கொன்றார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், இரட்டை கொலை வழக்கு குற்றவாளி கிஷோர் குமார் மண்டல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பல்கார் பகுதியில் உள்ள குட்டையில் பதுங்கியிருந்த அவரை மடக்கிப்பிடித்த போலீசார், தண்ணீருக்குள் இருந்து வெளிவர மறுத்த கொலையாளியை இழுத்து வந்து கைது செய்தனர்.

Night
Day