மதுபோதையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் போலீசார், மருத்துவர்களை தாக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மது, கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 2 இளைஞர்கள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களை தாக்க முற்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசாரையும் அவர்கள் தாக்க முயன்றதால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அச்சமடைந்தனர். 

Night
Day