மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலரின் இருசக்கர வாகனம் திருட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய டிப்டாப் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்க்கும் ரமேஷ் கண்ணன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தியுள்ளார். வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து ரமேஷ் கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day