மதுரை வீடுகள் இடிப்பு ; தீக்குளிக்க முயற்சி - பதற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அருகே ஆக்கிரமிப்பு என கூறி வீடுகளை இடித்து அப்புறப்படுத்திய வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து பெண்கள் சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மூன்றுமாவடி பகுதியில் ஏராளமானோர் வசித்து வரும்நிலையில், வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என கூறி காவல்துறையினரின் உதவியுடன் அப்பகுதியில் உள்ள வீடுகளை இடித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் சிலர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியோர் மீது தீயணைப்புத்துறை வாகனங்கள் மூலமாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. மேலும், 7 பெண்கள் உட்பட 41 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day