மதுரை - வீடியோ விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அருகே கல்லூரி மாணவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடச்சனேந்தலைச் சேர்ந்த பைசல் அப்துல்லா பவாத் என்பவர் பிடெக் இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 28-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மதுரை கோ. புதூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைப்  பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பைசலைக் கடத்திச் சென்று அழகர் கோயில் அருகிலுள்ள மாங்குளம் மலையடிவார பகுதியில் வைத்து வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அழுகிய நிலையில் இருந்த பைசலின் உடல் மீட்கப்பட்டது. வீடியோ விவகாரம் தொடர்பாக கொலை நடந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day