மதுரை : தனது வயல் அருகே மது அருந்தியதை தட்டி கேட்ட நபர் படுகொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மேலூர் அருகே தனது வயல் பக்கத்தில் மது அருந்தியதை தட்டி கேட்ட நபரை வெட்டி படுகொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிநாராயணன். இவரது வயலுக்கு அருகே சிலர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக் கேட்ட லட்சுமிநாராயணனை, மது அருந்தி கொண்டிருந்த மர்ம நபர்களால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த கீழவளவு போலீசார், லட்சுமிநாராயணனை வெட்டிய நபர்களை 4 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். 

Night
Day