மதுரை : தீக்குளித்த திமுக நிர்வாகி சிகிச்சை பலனின்றி பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் உட்கட்சி பூசலால் திமுக நிர்வாகி தீக்குளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான கோ.தளபதி என்பவரின் வீடு, திருப்பரங்குன்றம் பசுமலை அருகே உள்ள மூலக்கரை பகுதியில் உள்ளது. இந்நிலையில், எம்எல்ஏ வீட்டுக்கு சென்று மானகிரி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி கணேசன், பதவிக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வெளியே வந்த கணேசன், திடீரென தான் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தனக்கு தானே  தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஓடி வந்து தீயை அணைத்து, ஆம்புலன்ஸ் மூலம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

கணேசனுக்கு 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டதால், மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதிகாலை 2.30மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day