மதுரை : பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அருகே பாஜக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த பாஜக நிர்வாகியான சக்திவேல் என்பவர், மதுரை மாவட்டம் குறிஞ்சிநகர் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்ட வந்த சக்திவேல், தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வண்டியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்த மர்மநபர்கள் சிலர் சக்திவேலை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில்,  சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சக்திவேலுவுக்கும் மற்றொரு நபருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. 

varient
Night
Day