மதுரை: இளைஞர் வெட்டி படுகொலை - 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அருகே வயலில் மது அருந்தியவர்களை தட்டி கேட்ட இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கீழையூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வயலில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த 2 பேரை தட்டி கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் லட்சுமி நாராயணனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்ற செயலில் ஈடுபட்ட தனுஷ், பனங்காடி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day