மதுரை: நீதிபதி என்று கூறி மோசடி செய்ய முயன்ற நபர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீதிபதி என கூறி மோசடி செய்ய முயன்றவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.  மதுரை மாவட்டம் பெருங்குடியை சேர்ந்தவர் ரவிச்சந்திர பாண்டியன். இவருக்கு ராமநாதபுரத்தில் சிட்கோ சார்பில் தொழிற்சாலை அமைக்க இடம் ஒதுக்​கி 11 லட்ச ரூபாய் கட்டுமாறு நிர்வாகம் கூறியுள்ளது. முதலில் ஒரு லட்சத்து 50ஆயிரம் ரூபாய்க்கு இடம் கொடுத்த சிட்கோ நிர்வாகம் தற்போது அதே இடத்தை 11 லட்ச ரூபாய்க்‍கு வழங்குவதாகவும் தம்மை பஞ்சாப்-அரியானா நீதிமன்றத்தில் நீதிபதி என்றும் கூறி, அதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் காட்டியுள்ளார். இதில் சந்தேகம் இருப்பதாக கூறிய உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவின்பேரில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், வழக்‍கு பதிவு செய்து பாண்டியனின் நீதிபதி நியமன கடிதம் போலி என தெரியவந்ததால் அவரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். 

Night
Day