மதுரை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் அனுப்பானடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேல அனுப்பானடியை சேர்ந்த ரமேஷ் என்ற மெண்டல் ரமேஷ், கட்டுமான பொருட்கள் விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்றிரவு நண்பர்களுடன் மது அருந்தியபோது, தலைகேறிய போதையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ரமேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்து சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி, தப்பியோடிய கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day