மதுரை: மனைவியை கழுத்து நெறித்து கொலை செய்த கணவன் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பதினெட்டான்குடி பகுதியை சேர்ந்த கவிதா-நாகராஜன் என்ற தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாடக மேடை பாடகியான கவிதா கடந்த 29ம் தேதி மதிச்சியத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று கோவில் விழாவிற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு சென்ற நாகராஜனுக்கும், கவிதாக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரம் அடைந்த நாகராஜன் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நாகராஜனை கைது செய்து சிறையின் அடைத்தனர்.

Night
Day