மதுரை: ரூ.50 கோடி மதிப்புள்ள 30 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை ரயில் நிலையத்தில் 50 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையை சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் என்பவர் போதை பொருளை கடத்தி வருவதாக, போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரயில் மதுரை வந்தடைந்தபோது, அங்கிருந்த அதிகாரிகள் பிள்ளமன் பிரகாஷை சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரிடமிருந்து 50 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

varient
Night
Day