மதுரை: வெளிநாட்டு கரன்சிகளை மாற்றுவது போன்று பணம் கொள்ளை - ஈரான் நபர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் வெளிநாட்டு கரன்சிகளை மாற்றுவது போன்று கொள்ளையில் ஈடுபட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மதுரை நேதாஜி சாலையில் உள்ள SRS Forex என்ற நிறுவனத்தில் வெளிநாட்டு கரன்சி மாற்றுவது போல் நடித்து பணத்தை திருடி சென்றதாக திடீர்நகர் போலீசில் புகாரளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிந்து, சிசிடிவி காட்சியின் அடிப்படையில் முகமது அலி என்ற நபரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், சுற்றுலா விசாவில் இந்தியா வந்து, ஆதார் கார்டு, பான்கார்டு வாங்கி வைத்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது.

Night
Day