மனைவியை கத்தியால் குத்திவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்த கணவன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை எண்ணூரில் மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். எண்ணூர் சத்தியவாணி மூர்த்திநகரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி ராஜலட்சுமியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனிடையே ராஜலட்சுமிக்கு பிரேம்குமாரின் தம்பியுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு வேலை முடிந்து தனது தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ராஜலட்சுமியை வழிமறித்த பிரேம்குமார், கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார் பிரேம்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day