மனைவி, 3 குழந்தைகள் வெட்டப்பட்ட விவகாரத்தில் பெண் உயிரிழப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் கணவன் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று உயிரிழந்தார். 


கெங்கவல்லி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த அசோக் குமாரும் அவரது மனைவி தவமணியும் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை அசோக் குமார் சரமாரியாக வெட்டியதில் இரு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மனைவி தவமணி மற்றும் குழந்தை அருள் பிரகாஷினி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மனைவி தவமணி உயிரிழந்தார்.

Night
Day