மாற்றுத்திறனாளி வாகனம் மீது மோதிய அரசுப் பேருந்து : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாற்றுத்திறனாளி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை அருகே மாற்றுத்திறனாளி சென்ற வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளான கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. கிட்டப்பா தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி அரபுதுல்லா என்பவர், கடந்த 3ம் தேதி மூன்று சக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் மயிலாடுதுறை பேருந்து நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்து அரபுதுல்லாவின் வாகனம் மீது மோதியது. இதில், அரபுதுல்லாவும், அவரது மனைவியும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சென்ற போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் முரளி செல்வன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Night
Day